search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோலார் பேனல்"

    • ஒவ்வொருவர் வீட்டிலும் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்க முடியும்.
    • மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யவும் இத்திட்டம் உதவியாக இருக்கும்.

    காஞ்சிபுரம்:

    வீடுகளில் சோலார் பேனல் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என காஞ்சிபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொருவர் வீட்டிலும் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்க முடியும். மேலும் உபரி மின்சாரத்தை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ.15,000 முதல் ரூ.18 ஆயிரம் வரை பெற முடியும். மேலும் இத்திட்டத்தில் இணைவோர்க்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    குறிப்பாக மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யவும் இத்திட்டம் உதவியாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய விரும்புவோர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியை அஞ்சல் துறையில் பணியாற்றும் தபால்காரர்களும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பெற உங்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தையோ அல்லது உங்கள் பகுதியில் தினம்தோறும் வரும் தபால்காரரை அணுகி விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சில விவசாயிகள் இன்று தங்களது விவசாய நிலங்களில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இல்லையென்றால் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அய்யானார் ஊத்து, வடக்கு செழியநல்லூர் கிராமங்களுக்கு இடையே ஏராளமான விவசாய பட்டா நிலங்கள் உள்ளது.

    இந்த நிலங்களில் திடீரென இரவோடு இரவாக தனியார் நிறுவனம் சார்பில் சோலார் அமைக்கும் பணிகள் தொடங்கியதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    இதனை கண்டித்தும் சில விவசாயிகள் இன்று தங்களது விவசாய நிலங்களில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் சோலார் பேனல் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏராளமான விவசாய நிலங்களிலும், இப்பகுதிகளில் உள்ள சிறு ஒடை, ஊரணிகளை அழித்தும் இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காவல்துறை, வருவாய்துறையில் புகார் தெரிவித்தும் அதுகுறித்து நடவடிக்கை இல்லை. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அரசுத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் சூரிய சக்தியை கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
    • விடுமுறை மற்றும் பயன்பாட்டு திறனுக்கு எஞ்சிய மின்சாரத்தை, மின்வாரியத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மடத்துக்குளம் :

    தமிழகத்தில், அரசுத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் சூரிய சக்தியைக்கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அரசு அலுவலகங்களில் பகல் நேரங்களில் தினசரி தேவைப்படும் மின்சாரத்தின் அளவிற்கு ஏற்ப திறன் கொண்ட 'பேனல்' அமைத்து அதில் உற்பத்தியாகும் மின்சாரம் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது.

    விடுமுறை நாட்கள் மற்றும் பயன்பாட்டு திறனுக்கு எஞ்சிய மின்சாரத்தை, மின்வாரியத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்திட்டத்தை உடுமலை நகரில் அமைந்துள்ள அரசு அலுவலகங்களுக்கு விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், முதற்கட்டமாக, மின்வாரிய அலுவலக மேற்கூரைகளில், பேனல் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு கட்டடங்களிலும் சோலார் பேனல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது என்றனர்.

    • 60 அடி உயரத்தில் இருந்து விழுந்தார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     கோவை:

    சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் நவீன் ராமலிங்கம்(30). இவர் கோவை வடவள்ளியில் உள்ள நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி புனிதா (29) சத்தியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், நவீன் ராமலிங்கம் நேற்று முன்தினம் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள சோலார் பேனலை ஆய்வு செய்ய சென்றார். அப்போது சுமார் 60 அடி உயர மேற்கூரையில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் சென்ற ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக நவீன் மனைவி புனிதா மருத்துவமனை நிர்வாகம் மீது ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×